கடன் தொல்லை; தனியார் நிறுவன ஊழியர் ஆற்றில் குதித்து தற்கொலை

by Staff / 07-11-2023 03:11:37pm
கடன் தொல்லை; தனியார் நிறுவன ஊழியர் ஆற்றில் குதித்து தற்கொலை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கோவிந்தபாடியை சேர்ந்தவர் கணேசன்(49) இவருக்கு சிவகாமி (45) என்ற மனைவியும் இரண்டு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். கணேசன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஓசூரில் இருந்து பஸ் மூலம் மேட்டூர் வந்த கணேசன் சொந்த கிராமத்தில் உறவினரை சந்தித்து விட்டு நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி காவிரி ஆற்றுக்கு நேற்று மாலை வந்தார். பின்னர் திடீரென காவிரி ஆற்றில் குதித்து விட்டார் இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக கொளத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் கணேசனை தேடினர். நள்ளிரவு ஒரு மணி அளவில் கணேசன் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவிரி கரையில் கணேசன் உடைமைகளை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அதில் கணேசன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் ராஜேஷ் கண்ணா என்பவருக்கு ரூபாய் 8 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டும். வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என கூறி இருந்தார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 30 லட்சம் வரை பணத்தை இழந்த கணேசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via