திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் இரண்டாம் நாள் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது.

by Editor / 14-11-2023 02:38:00pm
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் இரண்டாம் நாள் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை யாசாலை பூஜையுடன் துவங்கியது.  இத்திருவிழா தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர் கோயிலில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.

தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் இத்திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று அதிகாலை 3.00 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டது.  விஸ்வரூப தீபாராதனையும்,  உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Tags : திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் இரண்டாம் நாள் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது.

Share via

More stories