சிறுமி கொலை? எரிந்த நிலையில் எலும்புக்கூடு..

by Staff / 18-05-2024 12:40:13pm
சிறுமி கொலை? எரிந்த நிலையில் எலும்புக்கூடு..

திண்டுக்கல் பழனி அருகே உள்ள கோரிக்கடவு பகுதியில் நேற்று (மே 17) மாலை ஆடு மேய்க்க சென்றவர்கள் எரிந்த நிலையில் தலையில்லாத எலும்புக் கூடு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், எலும்புக் கூடுகளை மீட்டு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், எரிந்த நிலையில் எடுக்கபட்ட எலும்புக் கூடு சிறுமியாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via