வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி

by Staff / 14-08-2023 02:14:32pm
வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அம்மாநில மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சோலன் மாவட்டத்தில் உள்ள ஜாடோன் கிராமத்தில் பெய்த கனமழையால் இரண்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via