அரிவாள் வெட்டு விழுந்த மாணவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி!

by Staff / 14-08-2023 02:11:28pm
அரிவாள் வெட்டு விழுந்த மாணவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி!

நெல்லையில், நாங்குநேரியில் 12வது படிக்கும் மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திராதேவி ஆகியோர் மீது சக மாணவர்கள் ஜாதிய ரீதியான பிரச்னையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்நிலையில், நாங்குநேரியில் அரிவாள் வெட்டு விழுந்த பள்ளி மாணவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நரம்பியல் சிகிச்சை துறை தலைவர் மகேஷ் தலைமையில் மருத்துவர்கள் நெல்லைக்கு இன்று வந்துள்ளனர். அதன்படி, மாணவன் கையில் இருந்த மாவுக்கட்டு அகற்றப்பட்டு பரிசோதனைகள் செய்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படுகிறது.

 

Tags :

Share via