17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

by Staff / 21-01-2024 04:00:20pm
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

 திருவாரூர் மாவட்ட முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சிவராமன் காலனி பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டில் இருந்து 17 வயதான சிறுமி ட்ராவல்ஸ்  ஒன்றிற்கு கடந்த 18ஆம் தேதி முதல் வேலைக்கு சேர்ந்துள்ளார்.. இந்நிலையில், உரிமையாளரின் மற்றொரு கடையான செல்போன் கடைக்கு பாத்ரூம் சாவி வாங்க சென்றுள்ளார். அப்போது உரிமையாளர் தாஜுதீன் கதவை மூடிவிட்டு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via