4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்

by Staff / 03-12-2023 02:29:23pm
4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் எதிரொலியால் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து தீவிர புயலாக மாறுகிறது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில், புயல் நிலைகொண்டுள்ளது. வரும் டிச.5ஆம் தேதி ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்துக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via