மணிப்பூரில் தொடரும் வன்முறை!

by Staff / 19-08-2023 11:53:16am
மணிப்பூரில் தொடரும் வன்முறை!

மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மேதி இன மக்கள், தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில், இம்பாலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்சோ பைத்தேவின் இம்பாலில் உள்ள வீட்டுக்கு நேற்று மாலை மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதனால், மீண்டும் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

 

Tags :

Share via