10ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி
திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகன் முகமது அர்ஷத் (15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்து வீட்டில் இருந்து வந்த முகமது அர்ஷத், நேற்று முன்தினம் நண்பர்களுடன் அதே பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து முக அர்ஷத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் முகமது அர்ஷத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :