குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகே பிறந்த பச்சிளம் குழந்தை சாலையோரத்தில் வீச்சு

by Editor / 04-10-2022 08:17:17am
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகே பிறந்த பச்சிளம் குழந்தை  சாலையோரத்தில் வீச்சு

 தூத்துக்குடி மாவட்டம் குணசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெற்று வருகிறது.  தசரா திருவிழாவின் சிகர  நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை நடைபெறு வதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில்  முத்தாரம்மன் கோவில் இருந்து கடற்கரை செல்லும் வழியில் உள்ள மாடசாமிபுரம் அருகே சாலையோரத்தில் பிறந்து 15 நாட்களான பச்சிளம் பெண் குழந்தையை துணியில் சுற்றி விட்டு சென்றுள்ளனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் பச்சிளம் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைக்கு தேவையான சிகிச்சையளித்து பராமரித்து வருகின்றனர்.   தசரா திருவிழா நடைபெற்றுவருகின்ற நேரத்தில் கோவில் அருகே பச்சிளம்  குழந்தையை விட்டுச் சென்ற மர்ம நபர்கள் குறித்து குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 15 நாட்களே ஆன அழகான பச்சிளம் குழந்தையை சாலையோரத்தில் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories