ஜல சமாதியா நிலச் சமாதியா..? - வைரமுத்து வேதனை
பார்க்கப் பார்க்கப் பதற்றம் தருகிறது கேரளத்தின் நிலச்சரிவால் நேர்ந்த நெடுந்துயரம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இருந்த வீடுகளே இடுகாடுகளானதில்
இந்திய வரைபடத்திலிருந்தே சில கிராமங்கள் இல்லாமல் போய்விட்டன. அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை. பிணமாகிப் போனவர்களின் கடைசிநேரத் துடிப்பு என் உடலில் உணரப்படுகிறது. மனிதனுக்கு எதிராக இயற்கை போர்தொடுத்தது என வேதனை தெரிவித்துள்ளார்.
Tags :