சென்னை-பெங்களூரு மற்றும் மைசூர் இடையான வந்தே பாரத் ரயில் முன்னோட்டம் தொடக்கம்

by Editor / 07-11-2022 08:31:17am
 சென்னை-பெங்களூரு மற்றும் மைசூர் இடையான வந்தே பாரத் ரயில் முன்னோட்டம் தொடக்கம்

நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரெயில் சென்னை ஐ.சி.எப்.உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது.160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பூஜ்யம் கி.மீ.-ல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடும்.

பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில்கள், புதுடெல்லி-வாரணாசி, புது டெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர்-மும்பை மற்றும் அம்ப் அந்தாரா – புதுடெல்லி என 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை-பெங்களூரு மற்றும் மைசூர் இடையான முன்னோட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா இந்த சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். சரியாக காலை 5.50 மணி அளவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மைசூருக்கு இயக்கப்பட்டது

 

Tags :

Share via