திரையரங்கின் தீண்டாமை செயலுக்கு கண்டன குரல் கொடுத்த நடிகர்
சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் நரிக்குறவர் இன மக்களை டிக்கெட் இருந்தும் படம் பார்க்க உள்ளே அனுமதிக்காத திரையரங்க நிர்வாகம் குறித்து கண்டனம் எழுந்தது. இந்நிலையில், திரையரங்க நிர்வாக மேலாளர், அவர்கள் குறித்த நேரத்தில் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர் என விளக்கம் அளித்து இருந்தார். இதனிடையே, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என கூறியுள்ளார்.
Tags :