குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள குற்றால அருவிகளில் கடந்த 2 தினங்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் விடுமுறை தினத்தை ஆனந்தமாக அருவிகளில் குளித்துக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags : குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி.