மிரண்ட யானை: தெறித்து ஓடிய பக்தர்கள்

by Staff / 02-12-2022 03:59:09pm
மிரண்ட யானை: தெறித்து ஓடிய பக்தர்கள்

கேரளா மாநிலத்தில் அமைந்திருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்றது குருவாயூர் கோவில். இன்று அக்கோவிலில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தாமோதர்தாஸ் என்னும் யானை திடீரென மிரண்டு ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.ஆக்ரோஷமான யானையை பார்த்து பக்தர்கள் நாலாபுறமும் பதறியடித்து தெறித்து ஓடினர். அதன்பின்பு சக யானைகளின் உதவியோடு மிரண்ட யானையை கட்டுப்படுத்த பாகன்கள் கடும் முயற்சி செய்தனர். நீண்ட நேர முயற்சிக்கு பிறகு யானை தாமோதர் தாஸ் இயல்பு நிலைக்கு திரும்பியது.

 

Tags :

Share via