ஆஸ்கர் வென்ற இயக்குநருக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆஸ்கர் விருது வென்ற, ‘The Elephant Whisperers’ ஆவண குறும்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வேஸ்-க்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார். 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் சிறந்த குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில், தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானையை பராமரித்து வளர்த்த பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியின் கதைதான் தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்.
Tags :