10ஆம் வகுப்பு மாணவி பரிதாப மரணம்

by Staff / 29-03-2022 04:39:23pm
 10ஆம் வகுப்பு மாணவி பரிதாப மரணம்

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் டி நரசிபுரா தாலுகாவில் உள்ள அகூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதான மாணவி அனுஸ்ரீ நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

டி நரசிபுரா வில் உள்ள வித்யோத்தயா பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென அனுஸ்ரீ மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை ஆசிரியர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அனுஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர்.
 
அதீத மன அழுத்தம் காரணமாக மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 15 வயது மாணவி தேர்வு எழுதும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்தை முன்னுதாரணமாக எடுத்து மாணவர்கள் தேர்வு எழுதும் போது ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்க கர்நாடக அரசு அனைத்து மாணவர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via