ஏழைகளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா இபிஎஸ் கேள்வி

by Staff / 17-12-2022 04:16:28pm
ஏழைகளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா இபிஎஸ் கேள்வி

திமுக அரசு ஆவின் பொருட்களை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்திவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஆவின் நெய் விலையை 9 மாதத்தில் 3 முறை உயர்த்தி இருக்கிறது திமுக அரசு. குறைந்தபட்ச ஊட்டசத்தை ஏழைகள் பால், பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட ஏழைகளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா என கேட்டுள்ளார்.

 

Tags :

Share via