ஐந்து சீட்டுகளுக்காக படுகொலை குறித்து பேசாமல் அமைதியாக இருப்பதாக- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.
நெல்லையில் பட்டியல் இன விவசாயி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மௌனம் சாதிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு. விளிம்பு நிலை மக்களின் குரலாக தன்னை காட்டிக் கொள்ளும் திருமாவளவன் திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்படும் ஐந்து சீட்டுகளுக்காக இந்த படுகொலை குறித்து பேசாமல் அமைதியாக இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் வேங்கவயல் முதல் நாங்குநேரி வரை பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாகவும் இதற்கு திருமாவளவன் ஏன் குரல் கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக அரசு குற்றவாளிகளை பாதுகாப்பதாகவும் காவல்துறை செயலற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
Tags :


















