வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல்

by Staff / 11-03-2023 01:48:00pm
 வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல்

ஈரோடு மாநகரில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ஈரோடு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சற்று நேரத்தில் வெடிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்து போனை துண்டித்துள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தை அடுத்து, ஈரோடு நகர போலீசார், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளை கொண்டு பேருந்து நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதேபோல் ரயில் நிலையத்திலும் சோதனை மேற்கொண்ட போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via