அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி

by Staff / 04-11-2023 01:08:16pm
அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மாதம் அண்ணாமலை வீட்டின் முன் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. அப்போது ஜேசிபி வாகனம் சேதப்படுத்தப்பட்டதில் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via