வருமானம் இல்லாமல் மன உளைச்சலில் டெய்லர் தூக்கு போட்டு தற்கொலை
ஈரோடு ரங்கம்பாளையம், அன்னைசத்யா நகர் இரணியன் 3வது வீதியை சேர்ந்தவர் மனோகரன்(45). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் டெய்லராக பணியாற்றி வந்தனர். நேற்று கடையில் இருந்து வீட்டிற்கு சென்ற மனோகரன் நீண்ட நேரமாகியும் மீண்டும் கடைக்கு வராததால் சந்தேகமடைந்த மனைவி விஜயலட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்த போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கடந்த சில நாட்களாக போதிய வருமானம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்த மனோகரன் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ஈரோடு தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :