தவறான நிர்வாகமே காரணம் - சந்தோஷ் நாராயணன்

by Staff / 06-12-2023 01:19:19pm
தவறான நிர்வாகமே காரணம் - சந்தோஷ் நாராயணன்

சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே காரணம்' என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் X தளத்தில் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தனது பதிவில், 'கொளப்பாக்கம் பகுதியில் திறந்தவெளி நிலங்களும், குளங்களும் நிறைய இருந்தும், ஒரே கால்வாயில் கழிவு நீருடன், மழைநீரையும் வெளியேற்றுவது. மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது' என குறிப்பிட்டுள்ளார். பிரபலங்கள் விமர்சனம் செய்வது தொடர்ந்துள்ளது.

 

Tags :

Share via