பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன்
சென்னை சைதாப்பேட்டையில் பல்வேறு வழித்தடங்களில் மாநகர பேருந்து சேவை தொடங்கப்பட்டது. நிகழ்வில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சேவையை தொடங்கி வைத்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ராஜகண்ணப்பன், மா சுப்பிரமணியன் என்றாலே மாஸ்தான். நாங்களெல்லாம் நடந்துகொண்டிருக்கிறோம், அவர் ஒடிக்கொண்டிருக்கிறார் என்று பாராட்டினார்.நாள் ஒன்றுக்கு 30 லட்சம் பெண்கள் பேருந்துகளை பயன்படுத்துவதாக கூறிய அமைச்சர், 2,500 பேருந்துகள் தற்போது கூடுதலாக இயக்கப்பட்டு வருவதாகவும், பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இப்போது இல்லை என்றும் கூறினார். போக்குவரத்துத் துறையில் ஊழலை ஒழித்துள்ளதாகவும், நிதிச்சுமையை பற்றி கவலைப்படவில்லை. மக்கள் நலனைத்தான் முதலமைச்சர் பார்க்கச்சொல்லியிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
Tags :