எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள் - முதல்வர் பேச்சு

by Staff / 15-09-2023 01:05:11pm
 எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள் - முதல்வர் பேச்சு

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய அவர், 'திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என போலி பிரச்சாரம் செய்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிலர் எப்படியாவது தடுக்க நினைத்தார்கள். தமிழர் சமூகத்தில் இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்' என்றார்.

 

Tags :

Share via