வீட்டுக்குள் விபச்சாரம்-கணவன் மனைவி கைது.

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலைபகுதியான அப்பர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சரளா. இந்த தம்பதிகள் இளம் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதாகபோலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து விசாணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் போலீசார் அந்த தம்பதி இருந்த வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் வீட்டுக்குள் வைத்து இரண்டு பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.
இந்த தம்பதி, வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலை தேடிவரும் பெண்களைக் குறிவைத்து தனியார் நிறுவனங்களில் வேலை வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி, பின்னர் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
இந்த தம்பதியிடம் இருந்த இரண்டு பெண்களை மீட்ட போலீசார் அவர்களை அரசு காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். அவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் தம்பதிகளை கைது செய்து இவர்களிடம் இருந்த மூன்று செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Tags :