மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் ஆவின் நெய் விலை உயர்வு

by Staff / 15-09-2023 01:11:53pm
மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் ஆவின் நெய் விலை உயர்வு

பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் ஆவின் நெய் விலை உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 'ஒன்றரை ஆண்டுகளில் நான்காவது முறையாக ஆவின் நெய் விற்பனை விலையை ரூ.115 அளவிற்கு திமுக அரசு உயர்த்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசு நிர்வாகத் திறமையின்மை, முறைகேடுகளால் ஆவின் நிறுவன நட்டத்தை ஈடுகட்ட ஏழை எளிய மக்கள் தலையில் கூடுதல் சுமையை ஏற்றும் செயல்களைக் கைவிட்டு, ஆவின் நெய் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்' என கேட்டுக்கொண்டள்ளார்.
 

 

Tags :

Share via