மகனின் கண்முன்னே தாய் பலி
சென்னை, வேலப்பன்சாவடி அருகே சற்றுமுன் அதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் கண்டெய்னர் லாரி ஒன்று பெண்ணின் மீது மோதியதில் அவர் தலை துண்டாகி பலியானார். பெற்ற மகனின் கண்முன்னே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த பெண்ணின் மகனான லோகேஷ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இந்த கோர விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :