ஓட்டுக்காக பயங்கரவாதத்தை காங்கிரசு பாதுகாத்துள்ளது
பல்லாரியில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது,பிரதமா் நரேந்திரமோடிகேரளாவில் பயங்கரவாத சதித்திட்டங்கள் குறித்தும், அவை சமூகத்திற்கு ஏற்படுத்தக்கூடிய அழிவுகள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். அப்படிப்பட்ட சதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற படத்தைப் பற்றி குறிப்பிட்டார். பிரதமர் மோடி, “‘தி கேரளா ஸ்டோரி’ பயங்கரவாதத்தின் அசிங்கமான உண்மையைக் காட்டுகிறது மற்றும் பயங்கரவாதிகளின் வடிவமைப்பை அம்பலப்படுத்துகிறது. தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தும், தீவிரவாத போக்குடன் நிற்கிறது. ஓட்டுக்காக பயங்கரவாதத்தை காங்கிரசு பாதுகாத்துள்ளது என்றாா்.
Tags :