ஆயுத பூஜையை முன்னிட்டு சரஸ்வதி கோவிலில் ஏராளமானோர் சிறப்பு வழிபாடு

by Editor / 04-10-2022 08:36:11am
ஆயுத பூஜையை முன்னிட்டு சரஸ்வதி கோவிலில் ஏராளமானோர் சிறப்பு வழிபாடு

தமிழகத்தில் சரஸ்வதிக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ள கூத்தனூர் சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வெண்தாமரை மற்றும் நோட்டு புத்தகங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். 

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லாத நிலையில் இந்த ஆண்டு காலை முதல் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர் இதனை முன்னிட்டு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via