பஸ்ஸில் தவறவிட்ட பணம் நகை உரியவரிடம் ஒப்படைப்பு

by Admin / 25-06-2024 10:46:10am
  பஸ்ஸில் தவறவிட்ட பணம் நகை உரியவரிடம் ஒப்படைப்பு

திண்டிவனத்தில்  பஸ்ஸில் தவறவிட்ட பணம் நகை உரியவரிடம் ஒப்படைப்பு அரசு பேருந்து ஓட்டுநர் நடத்தினருக்கு குவியம் பாராட்டு

திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் செஞ்சி அடுத்த மேல்மன்னூர் துறிஞ்சி பூண்டி கிராமம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் வயது 45 அவரது மனைவி நிஷாந்தி மற்றும் குழந்தைகளுடன் செஞ்சிக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கவனக்குறைவு காரணமாக பேருந்து செஞ்சி வந்தவுடன் கையில் இருந்த பையை மறதியாக வைத்து விட்டு இறங்கி விட்டனர். அந்தப் பையில் 1 1/2. பவுன் நகை 200 கிராம் வெள்ளி 45 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை இருந்தது உடனடியாக, சங்கர் செஞ்சி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார் உடனடியாக போலீசார் திண்டிவனம் ஒலக்கூர் போன்ற காவல் நிலையங்களுக்கு பேருந்து நம்பரை கூறி அனைத்து காவல் நிலையம் தகவல் அளித்தனர் இந்த நிலையில் அந்த பேருந்து ஒலக்கூர் நிலையத்திற்கு வந்தபோது அரசுப் பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் சங்கர் தவறவிட்ட பையை ஒலக்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்  உடனடியாக ஷங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பணம் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை அவரிடம் போலீசார் ஒப்படைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். பேருந்தில் இருந்த  நகை மற்றும் பணத்தை ஒப்படைத்த போலீசருக்கும் டிரைவர் கண்டக்டருக்கும்  பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  பஸ்ஸில் தவறவிட்ட பணம் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
 

Tags :

Share via