வீடுகள் இடிந்து சேதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்
கயத்தார் பகுதியில் வீடுகள் இடிந்து சேதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள் - திருமண மண்டபத்தில் தங்க வைப்பு
கயத்தார்சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கயத்தார் தியாகராஜ பாகவதர் தெருவில் உள்ள வேலு என்பவரின் வீடு கனமழைக்கு இடிந்து சேதம் அடைந்துள்ளது. வீட்டிலிருந்த 15 பேர் உடனடியாக வெளியே சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தரப்பினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கயத்தார் பேரூராட்சி உறுப்பினர் அய்யாதுரை நேரில் சென்று , பாதிக்கப்பட்ட மக்களை அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளார்.
இதேபோன்று கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள அன்னை தெரசா நகர் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வீடு கனமழைக்கு இடிந்து சேதம் அடைந்துள்ளது.
இதேபோல் கோவில்பட்டி கருணாநிதி நகரையை சேர்ந்த கஸ்தூரி என்ற 80 வயது மூதாட்டி வீடும் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
Tags :