இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட சதி - ராகுல் காந்தி

by Staff / 29-01-2024 04:38:01pm
இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட சதி - ராகுல் காந்தி

பீகாரில் இன்று, இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தின்போது பேசிய ராகுல் காந்தி, உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட சதி நடக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க பாஜக-ஆர்எஸ்எஸ் நினைக்கின்றன. சமூக நீதிக்காக போராடும் மாவீரர்களின் கனவுகளை கொல்லவும், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பங்களிப்பை ஒழிக்கவும் திட்டம் தீட்டுகின்றனர். இதுதான் அடையாள அரசியலுக்கும் உண்மையான நீதிக்கும் உள்ள வித்தியாசம் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via