காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி.
தென்காசி மேலகரம் பகுதியில் வசித்து வரும் முருகன் (56) விவசாயியான இவர் தென்காசி பட்டாக்குறிச்சி பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டு பன்றிகளுக்காக மின்வேலி அமைத்துள்ளார். நேற்று மாலையில் தனது தோட்டத்திற்கு சென்ற முருகன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்த பொழுது காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த விவசாயி முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டுப்பன்றிகளுக்காக மின்வேலியை வைத்த விவசாயியே அதில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags : காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி.