செந்தில் பாலாஜி விவகாரத்தில் பிரதமர் தலையீடு

by Staff / 09-07-2023 11:54:03am
செந்தில் பாலாஜி விவகாரத்தில் பிரதமர் தலையீடு அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தமிழகத்தில் மட்டுமின்றி டெல்லி அரசியல் வட்டாரங்களிலும் அதிகமாக விவாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிமாற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனிடையே கடந்த இரு வாரத்திற்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜியை நீக்கம் செய்ததாக அறிவித்தார். அன்று தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்த பிரதமர், ஆளுநரின் இந்த உத்தரவை நிறுத்தி வைக்கச் சொன்னதாக தாகவல் வெளியாகியுள்ளது. 13 ஆண்டுகளாக முதல்வராக இருந்த மோடி, ஒரு ஆளுநர் அமைச்சரை நீக்கம் செய்வது சரியாகாது என்று கூறியதாக டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
 

Tags :

Share via