மது போதையில் தகராறு செய்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது.

by Editor / 09-07-2023 11:14:08am
 மது போதையில் தகராறு செய்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 4  பேர்  கைது.  தூத்துக்குடி மாவட்டம்  எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எப்போதும்வென்றான் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த 07.07.2023 அன்று கோவில் கொடை விழா நடந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த எப்போதும்வென்றான் முத்து நகரைச் சேர்ந்த கணேசன்  மகன் உத்தம ராஜா (19) என்பவர் மது போதையில் தகராறு செய்துள்ளார். இதைப் பார்த்த எப்போதும்வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் பழனி (43) என்பவர் மேற்படி உத்தமராஜாவை சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேற்படி உத்தமராஜா, அவரது சகோதரரான அருள்ராஜ் (27) மற்றும் அவரது நண்பர்களான எப்போதும்வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் முத்து பூபதி ராஜ் (19), எப்போதும்வென்றான் நடுத்தெருவை சேர்ந்த காட்டு ராஜா மகன் அரவிந்த்சாமி (19) ஆகிய 3 பேருடன் சேர்ந்து பழனியிடம் தகராறு செய்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பழனி அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர பாண்டியன் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரிகளான அருள்ராஜ், உத்தமராஜா, முத்து பூபதி ராஜ் மற்றும் அரவிந்த்சாமி ஆகிய 4 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Tags :

Share via