நாய் சண்டை.. துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலி

by Staff / 18-08-2023 12:58:06pm
நாய் சண்டை.. துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அருகருகே இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள் தாங்கள் வளர்த்து வந்த நாய்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. வங்கி பாதுகாவலராக பணிபுரியும் நபர் திடீரென வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து கீழே நின்றுகொண்டிருந்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில், 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து அவரது துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via