தீபக் ராஜா உடலை வாங்க சம்மதித்த உறவினர்கள்
நெல்லையில் கடந்த 20-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட தீபக் ராஜா உடலை வாங்க மறுத்து குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 7 நாள்களுக்குப் பின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதித்துள்ளனர். நாளை (27-ம் தேதி) காலை 9.30 மணிக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து தீபக் ராஜா உடல் சொந்த ஊரான வாகைக்குளம் எடுத்துச் செல்ல உள்ளதாக தகவல்.
Tags :