ஆவடி காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்.
இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், தமிழகத்தில் ஒரு லட்சத்து50 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஆனந்தி வழி தவறி வேறு தேர்வு மையம் சென்றுள்ளார். இதனையடுத்து, மாணவி ஆனந்தியை தக்க சமயத்தில் மீட்ட காவல்துறையினர் Traffic Patrol வாகனத்தில் அழைத்து வந்து தேர்வு மையத்தில் விட்டனர். தேர்வு மையத்தின் மெயின் கேட்டை ஊழியர்கள் மூடிக்கொண்டிருந்த போது மாற்றுப்பாதையில் மானவை தேர்வு மையத்திற்கு சென்றார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தமிழக காவல்துறையை பாராட்டி வருகின்றனர்.
Tags :