கல்வீச்சு, குண்டுவீச்சு; கேரளாவில் பெரும் பரபரப்பு

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேரள மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. பல இடங்களில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. கோழிக்கோடு, வயநாடு, திருவனந்தபுரம், ஆலப்புழா, பந்தளம், கொல்லம், திருச்சூர், கண்ணூர் ஆகிய இடங்களில் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன.
கோழிக்கோடு மாவட்டத்தில் 3 இடங்களில் கல் வீச்சு நடந்தது. இரண்டு இடங்களில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து மீது கல்வீச்சும், சிவில் நிலையம் அருகே மற்றொரு கேஎஸ்ஆர்டிசி பேருந்து மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சிவில் நிலையம் அருகே நடந்த கல்வீச்சில் கேஎஸ்ஆர்டிசி டிரைவர் ஷஷி காயமடைந்தார். கோழிக்கோடு தாமரசேரியில் லாரி மீது கற்கள் வீசப்பட்டன.
இதற்கிடையே கண்ணூர் உளியில் உள்ள நாராயணபாரா என்ற இடத்தில் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. செய்தித்தாள் ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. மாநில காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், பலத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :