வரப்பு வெட்டுவதில் தகராறு: தம்பியை அடித்தே கொன்ற அண்ணன்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகரித்து வரும் கஞ்சா போதை பழக்கங்கள், நகை பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் வரப்பு வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் தனது சொந்த தம்பியையே அண்ணன் ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் செங்கல்பட்டில் அரங்கேறியுள்ளது. செய்யூர் அருகே நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் கோதண்டன் மற்றும் அவரது இரு மகன்களையும் கைது செய்துள்ளனர்.
Tags :