தவெக மாநாடு நடக்கும் இடத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு

by Staff / 17-10-2024 03:13:59pm
தவெக மாநாடு நடக்கும் இடத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு

விழுப்புரம் விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.17) விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் நேரில் ஆய்வு செய்தார். மாநாட்டுக்கான மேடை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த எஸ்.பி. தீபக், “விவசாய நிலத்தில் வாகனங்களை நிறுத்தும்போது பாதுகாப்பு இருக்க வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.

 

Tags :

Share via
Logo