ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் மீண்டும் ஆஜர்

by Staff / 06-11-2023 12:24:39pm
ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் மீண்டும் ஆஜர்

அருந்ததியர் சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அருந்ததியர் சமூகத்தை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “வேளான் விளை நிலங்களை அழித்து சிப்காட் அமைக்கக்கூடாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்” என தெரிவித்தார்.

 

Tags :

Share via