இன்று தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 3,000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 3,000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அரிசி குடும்ப அட்டைதாரர் ,ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 3000 ரொக்க பணம் வழங்குவதோடு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. அத்துடன், அரசு அறிவித்துள்ளபடி ரேஷன் கடைகள் மூலம் இலவச வேட்டி மற்றும் சேவைகளும் விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 2.22 கோடி அரிசி குடும்ப அட்டதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர்.. ஏற்கனவே, வீடு வீடாக வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள்- நேரத்தில் மக்கள் தங்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம் .
Tags :



















