வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்.. 2 பெண்கள் மீட்பு

ஜாபர்கான்பேட்டை, பச்சையப்பன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடந்த 16ஆம் தேதி நோட்டமிட்ட போலீசார், பாலியல் தொழில் நடந்ததை உறுதி செய்தனர். அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார், இதனை நடத்திவந்த ஸ்டீபன் (50) என்பவரை கைது செய்தனர். பின்னர் விபச்சாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
Tags :