பொன்முடி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

by Staff / 29-01-2024 12:20:41pm
பொன்முடி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 4 வாரங்களுக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via