குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்புக்கூடுகள்... மருத்துவ மாணவி பயிற்சிக்காக வாங்கியது அம்பலம்...

by Admin / 26-08-2021 02:41:16pm
குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்புக்கூடுகள்... மருத்துவ மாணவி பயிற்சிக்காக வாங்கியது அம்பலம்...

சென்னை சாஸ்திரி நகர் குப்பைத் தொட்டியில் மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், மருத்துவப்படிப்பு மாணவி ஒருவர் ஆய்வுக்காக எலும்புகூட்டை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
 
சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த,  துப்புரவு பணி கண்காணிப்பாளராக இருக்கும் தங்கம் பழனி என்பவர், கடந்த 23 ஆம் தேதி அப்பகுதியில் கிடந்த பை ஒன்றில், எலும்புக்கூடு கிடப்பதாக, போலீசில் புகாரளித்திருந்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், எலும்புக்கூட்டை மீட்டு ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் எலும்புக்கூட்டை மருத்துவ மாணவி ஒருவர், ஆய்வுக்காக இடுகாட்டிலிருந்து வாங்கியது தெரியவந்துள்ளது.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணாவிக்கு எலும்புக்கூட்டை விற்றது யார் என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via