குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

by Editor / 24-07-2021 08:21:40pm
 குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

 

 குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அங்கு குளிக்க தடை நீடிக்கிறது.
குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக சாரல் நன்றாக பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று தினங்களாக பகல் முழுவதும் வெயில் இல்லை. வானம் எப்பொழுதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.


மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. கொரோனா தொற்று காரணமாக அருவிகளில் குளிக்க தடை நீடிக்கிறது. 

 

Tags :

Share via