வேலூர் மாவட்டத்தில்  83 நாட்களில் கள்ளச்சாராய வியாபாரிகள் மீது 691 வழக்கு.

by Editor / 17-08-2023 10:15:49am
வேலூர் மாவட்டத்தில்  83 நாட்களில் கள்ளச்சாராய வியாபாரிகள் மீது 691 வழக்கு.

வேலூர் மாவட்டத்தில் கடந்த (25-05-23) முதல் (15-08-23) ஆம் தேதி வரை 83 நாட்களில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில்.கள்ள சாராயம்-16,833 லிட்டர்,கள்ளச்சாராய ஊறல் -59,300 லிட்டர்,மது பாட்டில்கள்-5,522,(கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் மூலப் பொருட்கள்),வெள்ளம்-5,110 கிலோ,சர்க்கரை-870 கிலோ,வேலம்பட்டை-800 கிலோ,ஆகியவை அழிக்கப்பட்டுகள்ள சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள்--24 வாகனங்கள் பறிமுதல் செய்யபபட்டுள்ளதாகவும்,
கள்ளச்சாராய வியாபாரிகள் மீது 691 வழக்குகள் பதிய செய்யப்பட்டு கள்ளச்சாராய எதிரிகள்-159 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்-23 வழக்குகள் (BL Act) பதிவு செய்யப்பட்டுள்ளது.என்றும் வேலூர்மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via