நெல்லையில் இறந்த கைதி  குடும்பத்துக்கு ரூ.14.12 லட்சம் -: அமைச்சர் ரகுபதி வழங்கினார்

by Editor / 02-07-2021 08:39:04pm
நெல்லையில் இறந்த கைதி  குடும்பத்துக்கு ரூ.14.12 லட்சம் -: அமைச்சர் ரகுபதி வழங்கினார்

 

 பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதி முத்துமனோ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக முதல்வர் அறிவித்த10 லட்சமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கான 4 லட்சத்து 12 ஆயிரம் சேர்த்து 14.12 லட்சத்தை முத்து மனோ தந்தையிடம் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக சட்டதுறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது,
முத்து மனோ உயிரிழப்பு சம்பவம் திமுக ஆட்சிக்கு முன்னால் நடந்தது.இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது விரைந்து  நடவடிக்கை எடுக்கப்படும் உயிரிழந்த முத்து மனோ குடும்பத்துக்கு முதல்வர் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

 

Tags :

Share via